100 யூனிட் இலவச மின்சாரம் குறித்து தமிழக மின்சார வாரியம் மகிழ்ச்சி அறிவிப்பு!..
100 Unit Free Electricity Cancelled Fake News
100 Unit Free Electricity Cancelled Fake News மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்ட தமிழ்நாடு மின்சார வாரியம்.தமிழ்நாடு மின்சார வாரியத்தில் இருந்து மகிழ்ச்சியான செய்தி பொதுமக்களுக்கு வந்துள்ளது அந்த முழுமையான தகவல் என்ன என்பதை இப்போது நாம் முழுமையாக பார்க்கலாம்.

தமிழக வீடுகளில் சுமார் 100 யூனிட் வரையிலான மின்சாரத்தை இலவசமாக தமிழ்நாடு மின்சாரிய வாரியம் மூலம் தமிழக அரசு வழங்கி வருகிறது. இந்த நிலையில் 100 யூனிட் இலவசம் மின்சாரம் ரத்தாகும் என சமூக வலைதளங்களில் இது தொடர்பான செய்திகள் வந்த வண்ணம் இருந்த நிலையில் இதற்கான தெளிவான விளக்கத்தை தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
கடந்த ஜூலை மாதம் ஒன்றாம் தேதி தமிழக முழுவதும் மின் கட்டண உயர்வானது அமலுக்கு வந்தது. இந்த மின் கட்டண உயர்வு கடந்த ஆண்டும் ஜூலை ஒன்றாம் தேதி முதல் மின் கட்டணம் உயர்வு அமலுக்கு வந்தது.
தற்போது ஒவ்வொரு ஆணும் ஜூலை ஒன்றாம் தேதி முதல் மின் கட்டணம் உயர்வு அமலுக்கு வரும் என்றும் அதன்படி கடந்த இரண்டு ஆண்டுகளாக மின் கட்டணம் உயர்வானது தமிழகத்தில் அமலுக்கு வந்தது .
தமிழகத்தில் வீடுகளுக்கு மின்சாரமானது இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மின்கட்டணம் ஆனது கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது .அப்போது மின் கணக்கீடு செய்யும் போது முதலில் வரும் 100 யூனிட் மின்சாரத்துக்கு கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை.
எனவே இதனை சிலர் முறைகேடு செய்வதால் ஏற்படும் இழப்புகளை தவிர்க்க 100 யூனிட் இலவசம் மின்சாரம் ரத்தாகும் என்று சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி இருந்தது. இந்த செய்தி உண்மை இல்லை என்று தமிழ்நாடு மின்சாரியா வாரியம் விளக்கம் அளித்துள்ளது .எனவே தமிழகத்தில் தொடர்ந்து வீடுகளுக்கான 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்ற மகிழ்ச்சி தகவல் கிடைத்துள்ளது.
மாதம் ஒருமுறை வீடுகளுக்கு மின் கணக்கிடும் முறை தமிழகத்தில் நடைமுறைக்கு வருமா என பொதுமக்கள் ஏங்கி தவிக்கின்றனர். ஏனெனில் திமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்துள்ள இந்த அறிவிப்பு திமுக ஆட்சி காலம் நிறைவடையும் முன் ஆவது வெளிவந்தால் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.