காலாண்டு தேர்வு முடிவுகள்: பள்ளிக்கல்வித்துறை தலைமை ஆசிரியர்களுக்கு வெளியிட்ட முக்கிய உத்தரவு!..
Quarterly Exam Marks Entry EMIS Last Date Oct 15
Quarterly Exam Marks Entry EMIS Last Date Oct 15 தமிழக அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் ,தனியார் பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு கடந்த மாதம் இறுதியில் நடந்து முடிந்தது. அதனை தொடர்ந்து காலாண்டு விடுமுறையும் விடப்பட்டது.
காந்தி ஜெயந்தி முடிந்து அக்டோபர் மூன்றாம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்றிருந்த நிலையில் ஆசிரியர்கள் கோரிக்கை காரணமாக அக்டோபர் ஆறாம் தேதி வரை காலாண்டு விடுமுறையானது நீடிக்கப்பட்டது.

எனவே அக்டோபர் ஏழாம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதனைப் போல் அக்டோபர் 7ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டன.
பள்ளிகள் திறக்கப்பட்டது தொடர்ந்து காலாண்டு தேர்வு விடைத்தாள்கள் திருத்தப்பட்டு மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.இந்த நிலையில் எமிஸ் இணையதளத்தில் மாணவர்களின் காலாண்டு தேர்வு மதிப்பெண்களை பதிவேற்றுவது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறையானது முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் ச.கண்ணப்பன் மற்றும் தொடக்கக் கல்வித் துறை இயக்குநர் பூ.ஆ.நரேஷ் சார்பில், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்று இன்று (அக்டோபர் 8 ) அனுப்பப்பட்டுள்ளது.
அதில், “தமிழகத்தில் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் நடப்பு கல்வியாண்டுக்கான காலாண்டு மற்றும் முதல் பருவத் தேர்வில் 6 தல் 8ஆம் வகுப்பு மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களை எமிஸ் வலைதளத்தில் ஆசிரியர்கள் பதிவு செய்ய வேண்டும்.
விடைத்தாள்களை திருத்திய பின்னர் தொகுத்தறி மதிப்பெண்களை (100 மதிப்பெண்) அக்டோபர் 15ஆம் தேதிக்குள் பதிவு செய்வது அவசியமாகும்.
இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்த தகவலை அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 8ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் அனைத்துவித ஆசிரியர்களுக்கும் தெரியப்படுத்த வேண்டும்.