பள்ளி கல்லூரிகளுக்கு 3 நாட்கள் தொடர் விடுமுறை அறிவிப்பு!- மாணவர்களுக்கு வெளியான மகிழ்ச்சி செய்தி!..
3 Days Continue Holiday For School and Colleges
3 Days Continue Holiday For School and Colleges தமிழகத்தில் காலாண்டு விடுமுறையானது முடிந்து தற்போது பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டு வழக்கம்போல வகுப்புகள் நடைபெற்று வருகிறது.
இது ஒரு புறம் இருந்தாலும் அக்டோபர் மாதம் தொடக்கத்தில் இருந்தே பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறை ஆனது அறிவிக்கப்பட்டு வருகிறது.

அந்த வரிசையில் தற்போது அக்டோபர் 11-ம் தேதி சரஸ்வதி பூஜையும் 12-ம் தேதி விஜயதசமியும் கொண்டாடப்பட உள்ள நிலையில் வெள்ளி சனி ஞாயிறு என தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறையானது வருகிறது.
இதனால் மாணவர்கள் தங்களது உறவினர்களை பார்க்கவும் சுற்றுலாவிற்கு செல்லவும் திட்டமிட்டு வருகின்றனர் மேலும் இம்மாத இறுதியான அக்டோபர் 31-ஆம் தேதி தீபாவளி பண்டிகையும் வருவதால் மாத கடைசியிலும் விடுமுறை வருகிறது.
எனவே மாணவர்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் மூன்று நாள் தொடர் விடுமுறையை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள்.