மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை தொடர்ந்து மேலும் ஒரு மகிழ்ச்சி தகவல் என்ன தெரியுமா?..
Additional Buses Run On Sep 27 28 Announced
Additional Buses Run On Sep 27 28 Announced பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறையானது அக்டோபர் இரண்டாம் தேதி முடிவடைந்து அக்டோபர் 3 முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்றிருந்த நிலையில் ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்று அக்டோபர் 6-ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

எனவே இது மாணவர்களுக்கு பெரும் மகிழ்ச்சி செய்தியாக உள்ளது .மேலும் மற்றொரு மகிழ்ச்சி செய்தி வெளியாகியுள்ளது. அது என்னவென்றால் பண்டிகை காலங்கள் நெருங்கி வரும் காரணத்தினாலும் மேலும் தற்போது காலாண்டு விடுமுறை விடப்பட்ட காரணத்தினாலும் பேருந்துகளில் பயணம் செய்வோரின் எண்ணிக்கையானது அதிகரிக்கும் என்பதால் கூட்ட நெரிசல்களை தடுக்கும் விதமாக கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழக அரசு ஆனது அறிவித்திருந்தது.
அதனைத் தொடர்ந்து தற்போது வார இறுதி நாட்கள் மற்றும் பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை முன்னிட்டு சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து செப்டம்பர் 27 மற்றும் 28 ஆகிய இரண்டு நாட்களுக்கு கூடுதலாக 1120 பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து கழகமானது மகிழ்ச்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.