மகளிர் உரிமைத்தொகை உயர்த்தப்படுமா?- வெளியான முக்கிய குட் நியூஸ்!..
Magalir Urimai Thogai Latest Update Sep 27
Magalir Urimai Thogai Latest Update Sep 27 திமுக ஆட்சிக்கு வந்த பிறகு முதல்வர் ஸ்டாலின் தலைமையில் மகளிர் உரிமைத்தொகை திட்டமானது தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் மூலமாக குடும்பத் தலைவிகளுக்கு உதவும் வகையில் மகளிருக்கு மாதம் ஆயிரம் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

தமிழ்நாட்டில் சுமார் 2 கோடியே 24 லட்சம் குடும்ப அட்டைகள் உள்ளது. இதில் 15 லட்சம் பேருக்கு மட்டுமே உரிமை தொகையானது வழங்கப்பட்டு வருகிறது. தற்போது புதிதாக ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்பவர்கள் உரிமைத்தொகை பெற விண்ணப்பித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் விராலிமலையில் அண்ணா பிறந்தநாள் முன்னிட்டு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி .விஜயபாஸ்கர் பேசுகையில் அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு மகளிர் உரிமைத் தொகை மாதம் ரூபாய் 2500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்று கூறியுள்ளார். இது அவர்களது தேர்தல் வாக்குறுதியாக இருக்கும் பட்சத்தில் திமுகவும் உரிமை தொகையை உயர்த்தி தரும் மக்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.