இனி வங்கி செல்ல அவசியம் இருக்காது.. ரேஷன் கடைகளில் வருகிறது புதிய திட்டம்!.. என்ன தெரியுமா?..
Micro ATM In Ration Shops Soon Oct 1
Micro ATM In Ration Shops Soon Oct 1 தமிழக அரசானது தொடர்ந்து பல்வேறு புதிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன் அடிப்படையில் தமிழ்நாட்டில் ரேஷன் கடைகளுடன் இணைந்து வங்கி சேவைகளும் மக்களுக்கு வழங்கும் வகையில் புதிய திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்த உள்ளதாக திட்டமிட்டுள்ளது அது குறித்து விரிவான தகவலை கீழே பார்க்கலாம்.

ரேஷன் கடைகளுடன் இணைந்து வங்கி சேவைகளையும் சாதாரண மக்களுக்கு வழங்கும் வகையில் புதிய திட்டம் ஒன்றைத் தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளிவந்துள்ளது. அதாவது தற்போது அரசு வழங்கும் ஓய்வூதியங்கள், பொங்கல் பரிசு போன்ற பல்வேறு நலத்திட்ட உதவிகள் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாகச் செலுத்தப்படுகிறது.
குறிப்பாக பயனாளிகள் தங்கள் வங்கிக் கணக்கில் இருக்கும் பணத்தை டெபிட் கார்டுகள் மூலம் ஏடிஎம்-களில் எடுக்க முடிகிறது. ஆனால் சில கிராமங்கள் மற்றும் மலைப் பகுதிகளில் ஏடிஎம் வசதிகள் இருப்பதில்லை. எனவே அங்குள்ள மக்கள் பணத்தை எடுக்கச் சிரமப்படுகின்றனர் என்று தான் கூறவேண்டும்.
எனவே வங்கி ஏடிஎம்களை எளிதில் அணுக முடியாத கிராமப்புற மக்களுக்கு உதவும் வகையில், ரேஷன் கடைகளை டிஜிட்டல் முறையில் பணப்பட்டுவாடா செய்யும் மைக்ரோ ஏடிஎம்களாகவும் (micro ATMs) மாற்றுவதற்கான பணிகள் ஆரம்பமாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்து கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் சுப்பையன் சொல்லும்போது, அனைத்து ரேஷன் கடைகளும் மைக்ரோ ஏடிஎம்களாக மாறும்போது ஆதார் எண் அடிப்படையில் ரூ.1000 முதல் ரூ.2000 வரை பரிவர்த்தனை செய்து கொள்ள முடியும் என்று கூறியுள்ளார்.
தமிழக அரசின் புள்ளி விவரப்படி தற்போது 34 லட்சம் பேர் முதலுதவி தொகை மாதம் ரூபாய் 1000 பெற்று வருகிறார்கள் அவர்கள் அவர்களின் 2.7 லட்சம் பேர் வங்கிகள் மற்றும் தபால் நிலையங்கள் வழியாக படம் பெற்றுக்கொள்கிறார்கள் இவர்களால் ஏடிஎம்களை பயன்படுத்த முடிவதில்லை என்று கூறப்படுகிறது எனவே தமிழக அரசு கொண்டு வருகின்ற இந்த புதிய நடைமுறை திட்டத்தின் மூலம் கிராமப்புற மக்களும் ரேஷன் கடை மைக்ரோ ஏடிஎம்கள் மூலமாக பண சேவையை பெற முடியும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்
மேலும் ரேஷன் கடைகளில் ஏடிஎம் சேவை கொண்டு வருவதன் மூலம் வங்கி பரிவர்த்தனைகள் அதிகரிக்கும் என்றும் அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்
எனவே இந்த திட்டமானது தமிழகத்தில் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது
மேலும் புதிய தகவல்கள் தெரிந்து கொள்ள tn. Tamilnewscollection.in இணையதளத்தை ஃபாலோ பண்ணுங்கள்.