Breaking: மாணவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட மீண்டும் ஒரு குட் நியூஸ்!- அதிரடி உத்தரவு என்ன தெரியுமா?..
TN Quarterly Exam Leave No Special Classes Sep 28
TN Quarterly Exam Leave No Special Classes Sep 28 காலாண்டு தேர்வு விடுமுறையிலும் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என்று பள்ளிக்கல்வித்துறையானது அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது. காலாண்டு தேர்வு விடுமுறை இன்று தொடங்குகின்ற நிலையில் சிறப்பு வகுப்புகள் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில் பள்ளிக்கல்வித்துறையை சார்பில் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.

காலாண்டு விடுமுறை ஆனது இன்று முதல் தொடங்குகின்ற நிலையில் பள்ளிக் கல்வித் துறை ஆனது முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியிட்டுள்ளது.
காலாண்டு தேர்வு விடுமுறை நாட்களின் போது பள்ளிகளில் எந்தவிதமான சிறப்பு வகுப்புகளும் நடத்தக்கூடாது என பள்ளி கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன் அடிப்படையில் காலாண்டு தேர்வு விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு எவ்வித சிறப்பு வகுப்புகளும் நடத்தக்கூடாது .மேலும் பள்ளி திறப்பதற்கு முன்பு பள்ளி வளாகத்தினை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் .பள்ளி திறக்கும் நாள் என்று அனைத்து மாணவர்களும் திருத்திய உடைத்தார்கள் அளிக்கப்பட வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
பள்ளி மாணவர்களுக்கு அக்டோபர் மூன்றாம் தேதி தான் காலாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படும் என வெளியிட்டு இருந்த நிலையில் ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்று அக்டோபர் ஏழாம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது .