தமிழகத்தில் காலாண்டு விடுமுறை நீட்டிப்பு?.. அமைச்சர் பதில்!
TN Quarterly Leave Extended Education Minister Discuss Sep 24
TN Quarterly Leave Extended Education Minister Discuss Sep 24 தமிழகத்தில் காலாண்டு விடுமுறை நீட்டிப்பு செய்வது குறித்து தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சர் திரு அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் பதில் அளித்துள்ளார் அதைப் பற்றிய முழு விவரம் இப்போது நாம் பார்க்கலாம்.

தமிழகத்தில் உள்ள அரசு அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் காலாண்டு தேர்வானது வருகிற செப்டம்பர் 27ஆம் தேதி உடன் நிறைவடைகிறது.
காலாண்டு விடுமுறை 2024
காலாண்டு விடுமுறை குறித்து தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையானது அதன் வேலை நாட்கள் குறித்த நாட்காட்டியில் ஏற்கனவே அறிவித்துள்ளதன் படி செப்டம்பர் 28ஆம் தேதி முதல் அக்டோபர் இரண்டாம் தேதி வரை 5 நாட்களுக்கு காலாண்டு விடுமுறை ஆனது அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர்களின் கோரிக்கை என்ன?
காலாண்டு விடுமுறையானது விடப்படக்கூடிய ஐந்து நாட்களில் ஏற்கனவே அரசு விடுமுறையாக அறிவிக்கக்கூடிய சனி மற்றும் ஞாயிறு அதனை தொடர்ந்து வருகின்ற அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி என மூன்று நாட்கள் அரசு விடுமுறையே வந்துள்ளது. மீதமுள்ள இரண்டு நாட்களே காலாண்டு தேர்வுக்கான விடைத்தாள்களை திருத்தி ஆசிரியர்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணிகளையும் செய்ய போதுமானதாக கால அவகாசம் இருக்காது.
எனவே அக்டோபர் மூன்றாம் தேதியை நான்காம் தேதி கூடுதல் விடுமுறையானது அறிவித்தால் அதனை தொடர்ந்து ஐந்து மற்றும் ஆறாம் தேதி சனி ஞாயிறு விடுமுறையானது வந்துவிடும். எனவே காலாண்டு விடுமுறையை முடித்து பள்ளியை அக்டோபர் 7ஆம் தேதி திறக்கலாம் என ஆசிரியர்கள் சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டது என்பது அனைவரும் அறிந்ததே.
அமைச்சர் பதில் என்ன?
இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்த கருத்து யாதெனில் காலாண்டு விடுமுறை நீட்டிப்பு குறித்து அதிகாரிகளுடன் ஆலோசித்து வருவதாக தெரிவித்துள்ளார்.
எனவே இதிலிருந்து காலாண்டு விடுமுறை நீட்டிப்பு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.