வோடபோன் கொண்டு வந்துள்ள அசத்தல் திட்டம்- 175 ரூபாய் ரீசார்ஜ் புதிய திட்டம் அறிமுகம்!
Vodafone New Recharge Plan Introduced Oct 8
Vodafone New Recharge Plan Introduced Oct 8 ஒவ்வொரு மாதமும் மக்களிடையே செல்போன்களுக்கு ரீசார்ஜ் செய்ய வேண்டும் என்பதே தற்போது பெரும் சுமையாக இந்த காலகட்டத்தில் உள்ளது காரணம், முதலில் ஒவ்வொரு செல்போன் நிறுவனங்களும் முதலில் குறைந்த விலையில் மக்களுக்கு அதிக பயனளிக்கக்கூடிய திட்டங்களை அளித்து வந்தன.

ஆனால் தற்போது இந்தியாவின் மிகப்பெரிய நெட்வொர்க் நிறுவனங்களான ஜியோ ஏர்டெல் போன்ற நிறுவனங்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதன் ரீசார்ஜ் கட்டணத் தொகையை பல மடங்கு உயர்த்தியது இது பொதுமக்களிடையே மிகுந்த அதிச்செயும் மன வேதனையும் ஏற்படுத்தி உள்ளது.
காரணம் ஒவ்வொரு வீட்டிற்கும் ஒரு செல்போன் ஒரு சிம் இருந்த நிலை போய் ஒருவருக்கே இரண்டு சிம் என்ற நிலைக்கு மக்கள் மாறியவுடன் இந்த ரீசார்ஜ் கட்டணங்கள் உயர்த்திக் கொண்டது பொதுமக்களிடையே மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதுவும் குறைந்த வருமானம் உள்ள மக்களுக்கு மாதம் ரீசார்ஜ் செய்யும் திட்டம் மிகப்பெரும் தலைவலியாக மாறியது.
தற்போது vodafone நிறுவனம் பிஎஸ்என்எல் நிறுவனம் போன்ற நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை அதிகரிக்க வேண்டும். என்ற நிலையில் கட்டணத்தை குறைத்து சலுகைகளை வழங்கி வருகின்றது அந்த வகையில் தற்போது vodafone நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களை கவர வேண்டும் என்று 175 ரூபாயில் புதிய ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் வோடபோன் நிறுவனமானது விஐ மூவி மற்றும் டிவி ஆப்ஸ்களில் மிகப்பெரிய அளவில் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்குகிறது. மேலும் இந்த இயங்கு தளத்தில் 17 ஓடிட்டி ஆப்புகள் 3350 லைவ் டிவி சேனல்கள் மற்றும் இ லைப்ரரி உள்ளிட்ட பல்வேறு வசதிகளையும் வழங்கி வருகிறது.
மேலும் இவை அனைத்தும் போஸ்ட்பெய்டு மற்றும் ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு வெவ்வேறு வகையான ரீசார்ஜ் பேக்குகள் மூலம் கிடைக்கின்றது. இதில் பத்து ஜிபி இலவச டேட்டாவும் வழங்கப்படும். மேலும் இது போன்ற தொலைதொடர்பு கட்டணங்களை பற்றி உங்களுக்கு தெரிந்து கொள்ள நமது இணையதளத்தை பார்வையிடவும்.